முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜோதிடம் - வெற்றிகரமான தொழில்.

இந்த பரந்து விரிந்த உலகில் மனிதனின் பணத்தேவை இவ்வளவுதான் என்று இல்லை. உழைக்கும் வர்க்கம் ஒரு பக்கம் இருக்க, உழைப்பின் மேல் வெறுப்பில் இருக்கும் கூட்டமும், தொழில் துவங்கினால் படுத்துகொண்டே சம்பாதிக்கலாம் என நினைக்கும் கூட்டமும் இல்லாமல் இல்லை. இன்றைய தேதியில் உலகில் குறிப்பாக இந்தியாவில் இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழகத்தில் வெற்றிகரமான தொழில் என்றால் அது மதம் மட்டும்தான். சாமியாராகி விடுதல்தான் எளிய வழியும்கூட. அல்லது ஜோதிடராகி விடுதல். மதத்தை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் எளிய வழியாக தெரிந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், சதுரங்கமும் எல்லோருக்கும் கை கொடுக்காது என்பதே நிதர்சனம். ஜக்கியைபோல ஆயிரத்தில் பத்து பேருக்கு அமைந்தால் ஆச்சர்யம்தான். போலவே தாக்குபிடிப்பதும் சற்றே கடினமான ஒன்று. இங்கே நாம் எளிய வழியின் குறுக்கு வழியை சற்றே பார்ப்போம். எதிர்காலம். மனிதனின் ஒட்டுமொத்த ஆர்வமும் கையில் இருந்து இந்த நொடியை எப்படி பயன்படுத்தலாம் என்பதில் இருக்காது. அடுத்த நொடி எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் இருக்கும். இந்த நாளை சரியாக பயன்படுத்தினால் அடுத்த நாள் சிற...

எனது புரிதலில் காதல்.

வாழ்வில் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும் என்பதை நாம் உணரும் தருணம் மிக அழகானது. போலவே வலியானதும்கூட. திசம்பர் 2024 இல் நான் இந்த இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை ஆரம்பிக்க எனக்கு அப்போது இருந்த ஒரு மனக்கிலேசம் காரணமாக இருந்தது. நான் இதுவரை அதுதான் காரணம் என நினைத்துக் கொண்டும் இருந்தேன். ஆனால் இந்த பக்கத்தின் காரணம் நான் இதுவரை அறிந்துகொள்ளாத ஒரு விசயம் காதல். அதை அறிந்துகொள்வதற்கான பயணம்தான் இது. வாழ்க்கையே பயணம்தானே? எனக்கு காதல் தோல்விகள் நடந்தவைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த மூன்றாவது காதலைப்பற்றி நிறைய பேசியும் விட்டேன் என்பதனால் உங்களுக்கு சலிப்படைந்திருக்கும் அல்லது உங்களுக்கு ஒருவேளை காதல் தோல்வியாகி இருந்தால் இதை அதனுடன் சேர்த்துவைத்து பெருமூச்சு விட வைத்திருக்கும் அல்லது காதல் தோல்விக்கெல்லாம் கலங்கமாட்டேன் என ப்ராட்காஸ்டில் திமிர்த்தனமாக பதிவுகள் இட்டவன் இன்று இப்படி தொங்கிப்போய் கிடக்கிறான் என நகைப்பை ஏற்படுத்தி இருக்கும். என்னவாகினும், நீங்கள் என்னுடைய ஃபாலோவர்கள். உங்களிடம் நான் என்னுடைய வாழ்வின் சில அங்கங்களை பகிர்ந்துகொள்வதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்ல...

காசி - 3 - முடிவு.

தொடர்ச்சி.. அன்று விநாயகருக்கு பிறந்தநாளாம். மறுநாள் கங்கையில் போட்டு கரைக்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் அவர் குதூகலமாக இருந்தார். பிறந்த மறுநாளில் இறுதிச்சடங்கு. இரண்டு நாட்கள் வாரணாசி தெருக்களில் நானும் அந்த சிவனடியாரும் வலம் வந்தோம். இறுதிச்சடங்கு செய்யும் இடங்கள், அகோரிகளின் இருப்பிடங்கள், பாங்குப்பால், கணக்கிலடங்கா சிவன் கோவில்கள், கங்காராதனா, சிவபானம் என புதனும் வியாழனும் சென்றது. நான் எதிர்பார்த்த அளவிற்கு காசி ஒன்றும் மோசமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். போலவே அந்த சிவனடியாரும். அவரின்மீது எனக்கிருந்த அத்தனை பிம்பமும் கட்டமைப்பும் சிறிது சிறிதாக உடைவதை உணர்ந்தேன். உண்மையில் முதலில் வாகனத்தை நிறுத்திய தேநீர் விடுதியில் எதற்கும் இருக்கட்டும் என ஒரு கத்தி வாங்கி வைத்துக் கொண்டேன். கடைசிவரை அந்த கத்திக்கு வேலை வரவே இல்லை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. நான் இப்படித்தான். பொதுவாக வெகுதூரம் பயணம் செய்வதாக முடிவு செய்துவிட்டால் முடிந்த அளவிற்கு என்னுடைய கையில் அல்லது பையில் ஏதேனும் ஒரு ஆயுதத்தை வைத்திருப்பேன். ஒரு காலத்தில் அதாவது நாலைந்து வருடங்களுக்கு முன்பு கீ செயின்கள் அப்டேட்...

காசி - 2 - பயணம்.

தொடர்ச்சி.. என் வாழ்வில் நிகழ்ந்தவையாக நான் இதற்கு முந்தைய பாகத்தில் எழுதி இருப்பவை அத்தனையும் நிமிட நேரத்தில் எனக்குள் தோன்றி மறைந்திட, இந்த அஹோரி என்னைவிட்டு நகர்வதாக இல்லை. "என்ன யோசிக்கற" என்றார். "யோசிக்கறேன். அவ்வளவுதான்" என்றேன். "என்கூடவே கூட்டிட்டு போயிடுவேன்னு யோசிக்கிறியா? இல்ல கொலை பண்ணிடுவேன்னு யோசிக்கிறியா? இல்ல வழிப்பறி பண்ணிடுவேன்னு யோசிக்கறியா?" என்றார். "இதெல்லாம் நான் யோசிச்சு இருப்பேன்னு நீங்க நினைக்கறீங்களா?" என்றேன். "எனக்கென்னப்பா தெரியும்? எனக்கு இப்போதைக்கு தெரிஞ்சது ஒன்னுதான். உன் மனசுல பெரிய பாரம் இருக்கு. காசி எல்லாத்தையும் தொலைக்கற இடம். அங்க ஏன் அஸ்தி கரையனும், ஒடம்பு எரியனும்னு பலர் நினைக்கறாங்க தெரியுமா? பாவ புண்ணியம் சொர்க்க நரகம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அதோட கணக்கு, சிவன் கணக்கு. அங்க போனா நாம நம்மள தொலைச்சுடுவோம். இந்த வாழ்க்கைய, வாழ்க்கை மேல இருக்க புடிமானத்த, இன்னும் சரியா சொல்லனும்னா இதுதான் வாழ்க்கை அப்டின்னு எல்லாரும் சொல்ற ஒரு விசயத்த தொலைப்போம். உண்மையில நாம தொலைக்க வேண்டியது அதுதான். எப்டி வேணால...

காசி - 1 - துவக்கம்.

உண்மையில் சினிமா எனக்குள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ, அதே அளவிற்கு பயணங்களும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கார், பைக், பேருந்து, இரயில், மாட்டுவண்டி, நடைபயணமாக இருந்தாலும் யாதொரு இடத்திலும் எவரொருவரின் அன்பிலும் தேங்கி நின்றுவிடாமல் பயணத்துக்கொண்டே இருத்தல் பெருமளவில் நம்மை நமக்கு உணர்த்தும். புதுப்புது மனிதர்கள், புதுப்புது ஊர்கள், சாலைகள், தெருக்கள், கட்டிடங்கள், வாழ்க்கை முறைகள், உடைகள், கலாச்சாரங்கள், உணவுகள் என அத்தனையும் மாறுபட்ட கோணத்தில் நான் உணர இந்த பிரபஞ்சம் சிவப்பு கம்பளம் விரித்து வைத்திருக்கும். மீண்டும் ஒருமுறை இதை சொல்லி இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். இதை சொல்லியே ஆக வேண்டுமா எனக்கேட்டால், இதை ஒரு சடங்கு, நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், நான் சமூக வலைதளங்களில் இருந்து இடைவெளி எடுத்ததற்கும், இந்த பயணத்திற்கும், இதில் எனக்கு கிடைத்திருக்கும் அனுபவத்திற்கும், இந்த பதிவில் நான் பதியப்போகும் ஒரு பெரும் உரையாடலுக்கும், அந்த உரையாடலுக்கு மூலக்காரணியாக இருந்த பல மொழி வல்லுநரான சிவனடியார் அல்லது அஹோரியுடனான சந்திப்பிற்கும...