முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எஸ்கேப்பிஸம்

ஒவ்வொன்றிற்கும் ஒரு இஸம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதாவது ஒரு இஸத்திலோ அல்லது எதாவது ஒரு இஸ்ட்டாகவோ இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள் பக்தி இருக்கிறது எனில் தீயிஸம், இல்லை எனில் ஏதீயிஸம், கும்பிடுவேன் ஆனால் நம்பிக்கை இல்லை என்றால் நியூட்ரலிஸம். இதில் குறிப்பாக நியூட்ரலிஸத்தில் பெரும்பான்மையானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் தான் எந்த பக்கம் என்ற முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறுபவர்கள். போலவே, பெரியாரிஸம், கம்யூனிஸம், மார்க்ஸிஸம், சேடிஸம் என ஏதோ ஒன்றை, ஒரு தத்துவத்தை, ஒரு தலைவனை, ஒரு கொள்கையை, பல நேரங்களில் நமக்கே தெரியாமல், புரியாமல், புரிந்துகொள்ள முயலாமல் நம்மை சுற்றி இருப்பவர்களோ அல்லது நாம் பரவலாக பார்ப்பதின் தாக்கமாகவோ நாம் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். நட்பு, காதல் என்ற உணர்வுகளில் துவங்கி வேலை, வாழ்க்கைமுறை என அனைத்திலும் இரண்டற கலந்து கிடக்கும் இந்த இஸங்களில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்டா? உண்டு! அதுதான் எஸ்கேப்பிஸம். இதை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது கேள்விப்படாமலும் இருந்திருக...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...