முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருச்செந்தூர் விவகாரம்

இன்றைய தேதியில் என்னைப்போல எழுத, என்னுடைய பதிவுகளையே எடுத்து பதிவு செய்ய பலர் உருவாகி வருகின்றனர். ஆனால் என்னைப்போல சர்ச்சைகளை ஏற்படுத்த நான் மட்டுமே இருக்கிறேன் என்பதை பெருமையாக சொல்லிக்கொண்டு இந்த பதிவை துவங்குகிறேன். இந்த பதிவு என் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்வதற்காக என நினைத்துவிடாதீர்கள். என்ன நடந்தது என்பதை சொல்வதற்காக. ஞாயிறுகளில் நான் Detox Day கடைபிடிப்பது வழக்கம் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிலேயே உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருக்காமல் இருந்தால் என்ன? சிறிது ஊரை சுற்றுவோம் என 15 நாட்களுக்கு முன் ஓசூர் சென்று இருந்தேன். அது ஒரு சர்ச்சையானது. அதனால் சென்ற வாரம் அமைதியாக இருந்துவிட்டேன். இந்த வாரம் தனுஷ்கோடி செல்லலாம், இந்தியாவின் கடைசி சாலையில் கால் பதிக்கலாம் என கிளம்பினேன். சென்று கொண்டிருக்கும்பொழுதே திடீரென திருச்செந்தூர் சென்றால் என்ன? என்றோர் எண்ணம். சரி, புது ஊர்களை காண்பதுதானே எண்ணம், எங்கு சென்றால் என்ன? என வாகனத்தை திருப்பி விட்டேன். திருச்செந்தூர் சென்று, கடலில் ஆசைதீர குளித்துவிட்டு கிளம்பியபொழுது அங்கே வந்த ஒரு முதியவர் என்னிடம்,...

வாசகர் கவிதைகள் - பகுதி 1

1) என்னிடம் இருந்து என்னை திருடிக்கொள். திருடிய என்னை உன்னுள் வைத்து ஒளித்துக்கொள், நீயே தேடினாலும் நான் கிடைக்காதப்படி. நான் தனிமையை வெறுக்கிறேன், உன்னிடம் இருந்து தூரமாக இருப்பதை துயரமாக நினைக்கிறேன், அருகில் வந்து என்னை உன் கரங்களில் ஏந்திக்கொள்.  நமக்குள் இருக்கும் இந்த தூரத்தை உன் காதல் கொண்டு காணாமல் போக செய், உன் இதழ்கள் கொண்டு என் காயங்களை ஆற்று, நான் வாழ்ந்தால் அது உன் வீட்டில் மட்டும் தான், நான் இறந்தால் அது உன் மடியில் மட்டும்தான், என்னவனே நான் உன்னுடையது.... - சாத்தானின் தேவதை 2) என்னவனே! என் மேனி முழுவதும் முள் வளர்த்து சென்று விட்டாய். நான் யார்மீது சாய்ந்துகொள்வது? - ராஜா ரம்யா 3) கடைசி மழைத்துளியும் சிதைந்தது, துப்பாக்கியின் சிரிப்பால்... 🌾 - பல்லவி 4) பெருமழையிலும் நனையாமல்  இலையின் அடியில்  இருக்கும் எறும்பாய்  என்னுள் நீ - சோழனின் தாய் 5) கைகோர்த்து நடந்ததில்லை, பூங்காவில் காலாற அமர்ந்ததில்லை, திரையரங்கு சென்றதில்லை, தித்திக்க பேசியதுகூட இல்லை. குறுஞ்செய்தி மட்டுமே தூதுவர்கள்.. உனக்கும், எனக்கும். சில நேரங்களில் பதில் வராமல், பல நேரங்களில் பதில் க...

நான் சந்தித்த மனிதர்கள் - 1

சில மாதங்களுக்கு முன், ஒரு தேநீர் விடுதியில் காபி குடிக்கலாம் என சென்றேன். நானோர் ஆகப்பெரும் காபி விரும்பி. இன்னும் சரியாக சொல்லப்போனால் காபி வாங்கி தருகிறேன் என சொல்லி என்னை கடத்தி கொண்டு சென்றுவிடலாம். எப்பொழுதும் நெரிசலாக இருக்கும் அந்த தேநீர் விடுதி, அன்று என்னமோ காற்றாடிக் கிடந்தது. எல்லா நேரமும் கூட்டம் இருக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இருக்க தேவையில்லை எனினும் திடீரென கூட்டம் இல்லாமல் இருப்பது சற்றே நெருடலாக இருந்ததை நான் மறுக்க விரும்பவில்லை. காபி போட சொல்லிவிட்டு சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன். எனக்கு சில வித்தியாசமான பழக்கங்கள் உள்ளது. சிகரெட் இல்லாமல் காபி இறங்காது, காபி இல்லாமல் சிகரெட்டை தொடமாட்டேன். என்னை பின் தொடர வேண்டாம். அது பெரும் பாதிப்பு. ஏனெனில் சிகரெட் புகைக்கும்பொழுது நம் தொண்டைக்குள் இருக்கும் நுண்ணிய நரம்புகளும், எதிர்ப்பு சக்தியை தரும் உயிரிகளும் இந்த புகையின் தாக்கத்தால் சுருங்கி ஒடுங்கி போய் இருக்கும். புகை பிடித்து முடித்த பின் குளிர்ந்த நீர் ஒரு குவளை குடித்து, அதற்கு பின் நான்கைந்து நிமிடங்கள் கழித்துதான் சூடான காபியை குடிக்க வேண்டும். இது உடல் அறிவி...

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...