முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தானின் போதனைகள் - 1

1) ஒருத்தர்னால நமக்கு எந்த காரியமும் ஆகாதுன்னா நாம அவங்கள மதிக்க மாட்டோம். அதேதான் நமக்கும், மதிக்கப்படவும் மாட்டோம். இதுதான் நியதி.

2) எத்தனை முறை தட்டினாலும் திறக்காத கதவுக்கு பின்னால் இருப்பவர்கள் செவிட்டு முண்டங்களாக கூட இருக்கலாம்.

3) விற்க போகும்வரை வீட்டிற்கு மதிப்பில்லை.

4) வயிறு நிறைந்தபின் உணவை நினைத்தால் உமட்டல் வரத்தான் செய்யும்.

5) நண்பனும், முழுமுதற் எதிரியும் நம் சிந்தனைகள்தாம். மனிதர்களை கணக்கில் வைத்து நேரவிரயம் செய்யாதே.

6) ஆசைப்படுவது எதுவும் நடக்காது என்று புரியும் நேரத்தில், ஆசைப்படுவதையே நிறுத்தி இருப்போம்.

7) கோவம் வரும்போது தியானம் செய். கொலைகள் செய்வது சட்டப்படி குற்றம்.

8) அரசியல்/பண ரீதியான பலன் இல்லையெனில் இறந்த மூன்று மாதங்களில் குடும்பம் கூட மறந்துவிடும். இவர்களுக்காகவா கொள்கை கோட்பாடுடன் இயந்திர வாழ்க்கை வாழ்கிறாய்?

9) உன் காதில் விழுபவை எல்லாம் அவரவர் கருத்தும் அவர்கள் கேட்டறிந்த செவி வழி செய்திகளும் தான். உண்மை துளியும் இல்லை.

10) நேரத்திற்கு தகுந்தாற்போல் நடப்பது, ஏழையாய் இருந்தால் பச்சோந்தித்தனம் பணக்காரனாய் இருந்தால் ராஜதந்திரம். அவ்வளவுதான்.

11) எரிக்கப்பட்டாலும் புதைக்கப்பட்டாலும் சமாதியிலும் எரிமேடையிலும் ஒருத்தருக்கு மட்டுமே அனுமதி. எவராயிருப்பினும் பின்னரோ முன்னரோ தான்.

12) மனதை மட்டும் தயார் படுத்திவிடு. மற்றதை அதுவே பார்த்துக் கொள்ளும்.

13) ஹெட்போன் அணிவதை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். காது சும்மா இருந்தா பாய்வதற்கு பலர் வருவர்.

14) நீ யார் என்பது உன் பெயரிலோ செயலிலோ இல்லை. உன் மனதில் இருக்கிறது. யாருக்கு உண்மையாய் இல்லாவிட்டாலும் உன் மனதுக்கு உண்மையாய் இரு.

15) மார்கழி ஆரம்பித்து விட்டது. சளி காய்ச்சல் தலைவலி போன்ற சின்ன சின்ன வியாதிக்கெல்லாம் சுருண்டு விடாதே. நாம் சந்திக்க கேன்சர், எய்ட்ஸ், மாரடைப்பு, கை கால் செயலிழப்பு போன்ற பெரும் வியாதிகளே காத்திருக்கின்றன. Stay Strong.

16) நமக்கு பிடிக்கவில்லை என்பதற்கு தவறு என்று அர்த்தம் இல்லை.

17) வாழு, வாழ விட்டால்.

வாழ விடு, நீ வாழ்ந்த பின்.

18) ரேசிஸ்ட்-டாக வாழாதீர்கள். எவ்வித பேதமும் இன்றி அனைவரையும் வெறுத்திடுங்கள்.

19) புரிவதற்குள் முடிந்து விடுவதுதான் வாழ்க்கை.

20) யாராவது உன்னை அவமானபடுத்தினால் மௌனமாக இரு. காரோ, குட்டி யானையோ, ஈச்சரோ, லாரியோ வாங்கியபின் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம்.

21) "ஒரு பொண்ணு அண்ணன்னு கூப்பிட்டா அன்னைக்கே" என்றோர் பழமொழி உண்டு கிராமப் புறங்களில். அதை தம்பி என்று மாற்றி அக்காக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர் ஆன்லைன் ஆண்கள்.

22) தனிமையே சிறந்தது என்று வாழ ஆரம்பிக்கும்போது ஆறுதல் சொல்ல, தோள் கொடுக்க ஒருவன் நிச்சயமாக வருவான்.

உண்மையில் அப்படி ஒருவன் இல்லை. வாங்க போய் மனநல மருத்துவரை பார்ப்போம்.

23) பலான படங்கள் பார்க்கும்போது "ச்ச, கேமராமேன் பாவம்ல" என்ற எண்ணம் வர ஆரம்பித்துவிட்டால் வயதாகிவிட்டது என அர்த்தம்.

24) இங்கு ஒரே வெற்றியாளர் மரணம் மட்டுமே.

25) காத்திருக்கிறோம் என தெரிந்தும் காத்திருக்க வைப்பவர்களை ஏதாவது செய்துவிட்டால் அதற்கு சட்டப்படி என்ன தண்டனை என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

26) உனக்கு வழி காட்டிய கைகளை என்றும் மறக்காதே. சரியான வழியாக இருந்தால் தங்கத்தால் கைமாறு செய். தவறான வழியாக இருந்தால் இரும்பினால் மாறு கை செய்யலாம்.

27) கொலை செய்ய தூண்டியவருக்கு தான் தண்டனை அதிகம் எனில், வம்பிழுத்து கொலை செய்ய தூண்டியவனை கொலை செய்து அவனுக்கான அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையை நாமே வழங்கிவிட்டால் என்ன தவறு? சட்டப்படி உயிரெடுத்தால் தண்டனை, தனி மனிதன் செய்வது கொலையா?

28) புரியாதவர்களுக்குத்தான் விளக்கம் எல்லாம், புரிந்துகொள்ள முயலாதவர்களுக்கும் விரும்பாதவர்களுக்கும் அல்ல.

29) பேசாதே! பேசினால் கைதாகும் வரை நிறுத்தாதே.

30) எந்த கடவுளாலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது.

ஆனால் ஒரு நல்ல வக்கீலால் முடியும்.

31) வீடு கார் நகைகள் என பொருட்களின் பின்னால் ஓடுவதை என்று நிறுத்துகிறாயோ அன்றுதான் உன்னால் உண்மையான சுதந்திரத்தை பெற முடியும்.

32) பணத்திற்கு பின் "*தகாத வார்த்தை* என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்" என்னும் அளவிற்கு தைரியம் தருவது நேர்மை மட்டும்தான். 

ஆனால் இந்த இரண்டும் ஒரு சேர எந்த மனிதனிடமும் இருக்காது.

காரணம்..

நேர்மையும் கோவமும் இரட்டை பிறவிகள்.

பணமும் திமிரும் இரட்டை பிறவிகள்.

கோவமும் திமிரும் நேர் எதிரானவை. அதனாலேயே நேர்மையும் பணமும் எதிரானவை ஆகின்றன.

33) புகை பிடிப்பதும் ஒரு வகையில் தியானம்தான். கோபத்தில் கொலைகாரர்கள் ஆகி இருக்க வேண்டிய பலரை சிகரெட் சாந்தப் படுத்தி இருக்கிறது.

34) மற்றவர்கள் உன்னிடம் எப்போது ஏன் பேச நினைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டால் ஆட்டம் உன் கையில் இருக்கிறது என்று அர்த்தம்.

35) காவலர் ஒருவர் "பாத்ரூமில் குற்றவாளிகள் வழுக்கி விழுவது அத்தியாவசியம். இது குற்றங்களை குறைக்கும்" என்று பேசிய காணொளி ஒன்றை பார்த்தேன்.

பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் சிறை சென்றால் அவர்கள் செல்லும் கழிவறை வழுக்கி விடாமல் இருக்குமா இல்லை கழிவுகளை காவலர்களே சுத்தம் செய்வார்களா?

36) உன்னை சீண்டுபவனை நீ பெட்ரோல் ஊத்தி கூட கொளுத்தி விடு, தவறில்லை. ஆனால் மனது புண் படும்படி மட்டும் பேசாதே.

இதைதான் வள்ளுவரும், "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" என்கிறார்.

37) எதிர் கருத்து உள்ளவர் எல்லாம் எதிரி இல்லை. அதேபோல் எல்லா கருத்துகளுக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

38) சட்டப்படி, உன் மேல் அடி விழுந்தால் நீ திருப்பி அடிக்கும் முதல் அடி மட்டும் "self defence". அந்த முதல் அடிக்கு பின் யாரால் எழுந்து நிற்க முடியும் என நீ நினைக்கிறாயோ அவரே உன் எதிரி. மற்றவனெல்லாம் ஓடும் காரைப் பார்த்து குறைக்கும் நாய். கடந்து செல்.

39) பள்ளி/கல்லூரி மாணவனால் கூட கஞ்சா விற்பவனை தேடி கண்டுபிடித்துவிட முடிகிறது, ஆனால் காவல்துறையால் முடியவில்லை.

40) AC அறையில் வாழும் கல்லூரி மாணவர்களை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. Duke வாங்கி தர மாட்டேன் என பெற்றோர் சொன்னால் தூக்கு மாட்டிக்கொள்ள கூட மின்விசிறி இருக்காது. ப்ச்.

41) தற்கொலை செய்ய கடலளவு துணிச்சல் வேண்டும். தற்கொலை எண்ணம் வந்து அதிலிருந்து மீண்டுவிட்டால் அந்த கடலே வெறும் குளமாக தெரியுமளவிற்கு துணிச்சல் வந்துவிடும். இந்த முயற்சியில் வென்றவன் தோற்றுவிடுவான், தோற்றவன் தோற்கவே மாட்டான்.

42) ஒருவேளை விபத்து நடந்தால் கைகள் கால்கள் உடலின் மற்ற பாகங்கள் நசுங்கி எலும்புகள் சுக்கல் சுக்கலாக நொறுங்கி போனாலும் தலைக்கு ஒன்றும் ஆகாது. தலைகவசம் அணியுங்கள். தலை கவசம் உயிர் கவசம்.

43) மனிதர்களின் மீது நம்பிக்கை இழந்து வெறுப்பு வர ஆரம்பித்துவிட்டால் மனதை அமைதியாக வைத்துக்கொள். நல்ல தெரபிஸ்ட்டை பார். நல்ல வக்கீலையும் பார்க்கலாம்.

44) குறுக்கு வழியில் பணம் சேர்க்க நினைத்துவிட்டால் செயின் அறுப்பு, செல்போன் பறிப்பு என்று சின்னதாக செய்து மாவுக்கட்டு வாங்காதே. சட்டத்தை விலைக்கு வாங்குமளவிற்கு பெரியதாக செய். முடியாவிட்டால் சாகும்வரை வேலைக்கு செல். நீ குறுக்கு வழிக்கு தகுதியற்றவன்.

45) குற்றம் செய்ய முடிவு செய்து விட்டால் முதலில் சட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்.

46) நீ கொலை செய் கொள்ளையடி ஊரை அடித்து உலையில் போடு என்ன என்ன தோன்றுகிறதோ அத்தனையையும் செய்து செத்தொழிந்து போ. எக்காரணத்தை கொண்டும் விருப்பமில்லாத எந்த ஒரு பெண்ணையும் தொடாதே. 

Be a man. ஆம்பளையா இருங்கடா.

47) ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்தவுடன் இரண்டு மூன்று கோவில் அல்லது நாலு ஐந்து காவல் நிலையம் ஆரம்பிக்கலாம் என சிந்தித்தால் நீயும் என் நண்பனே.

48) பணம் வெறும் காகிதம்தான், ஒரு பொழுதும் சந்தோஷத்தை தராது. ஆனால் பணத்தினால் ஆகக்கூடிய காரியங்கள் தரும்.

49) ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் அல்லது அதை முந்திக் கொண்டு செல்பவர்களை பார்த்தால் ப்ரேக்கே பிடிக்காத ரெண்டு மண்ணு லாரியும் ரெண்டு தண்ணி லாரியும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

50) தவறுகள் செய்யாதே. ஒருவேளை செய்துவிட்டால் எக்காரணத்தை கொண்டும் மன்னிப்பு கேட்காதே. அது மாபெரும் வன்முறை.

- தொடரும்..


: எழுத்தாளுமை இக்ரிஸ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...