முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பயணங்கள்

உங்களுக்கு தெரிந்து சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் சென்றிருந்தேன். தனுஷ்கோடி செல்ல வேண்டிய நான் மனது மாறி திருச்செந்தூர் சென்றது அதனால் ஏற்பட்ட கலவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு 15 நாட்களுக்குமுன் ஓசூர். அதுவும் ஒரு சர்ச்சையானதை நீவிர் அறிவீர். சர்ச்சைகளை விலக்கி வைத்து பார்த்தால் இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது நானோர் ஊரோடி. பயணம் செய்வது என்னுடைய பல பொழுதுபோக்குகளில் ஒன்று. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட என் மனநலத்திற்கான சிகிச்சை எனலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல், ஒரு தேவை, ஒரு தப்பிக்கும் வழி தேவைப்படும். அதைப்பற்றி, எஸ்கேப்பிஸம் என்ற ப்ளாக் பதிவில் விளாவரியாக எழுதி இருப்பேன். என்னை ஒப்பிட்டு சொல்லுவோமேயானால்., எனக்கு சினிமா, புத்தகம், பாடல், அனிமே, வெப் சீரிஸ், டிவி சீரிஸ், மாங்கா, காமிக்ஸ், சில நேரங்களில் அரசியல், பயணம், வெற்று உரையாடல்கள், மது அருந்துதல் என எக்கச்சக்க தப்பிக்கும் வழிகளை வைத்திருக்கிறேன். இத்தனையும் வைத்திருக்கிறாயே? எப்படி வாழ்க்கையை வாழுகிறாய் என நீங்கள் கேட்கலாம். வாழ்க்கையே வேண்டாம் என்றுதானே இத்தனையு...

என் காதல்கள் - கேள்விகளும் பதில்களும்

1) இருவரையும் எங்கே சந்தித்தீர்கள்? இங்கேதான். இன்ஸ்ட்டாகிராமில். ஒருவர் 4 மாதங்களாக இருந்தார். இன்னொருவர் இரண்டு மாதங்களாக இருந்தார். இரண்டாமவரை காதலித்தது ஒரு மாதமாக. 2) இருவரிடமும் எப்படி சம்மதம் வாங்கினீர்கள்? நான் காதலில் இருக்கிறேன் என ப்ராட்காஸ்டில் பதிவிட்டது பலருக்கு தெரிந்திருக்கும். அதற்குப்பின் வந்தவர் இரண்டாமவர். இரண்டாமவருக்கு நான் காதலில் இருப்பது தெரியும். முதலாமவரிடம் மறைத்துதான் வைத்திருந்தேன். தெரியும் நேரத்தில் சில பல பிரச்சனைகளை சந்தித்தேன். பின், அவரே அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். 3) ஏன் இரண்டு காதல்கள்? நான் ஏற்கனவே இருந்த காதலில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தேன். நிஜ வாழ்விற்கும் இணைய வாழ்விற்கும் இடையே ஒரு மதில் சுவரை எழுப்பி இருந்தேன். அதை சிறிது சிறிதாக உடைவதை உணர்ந்தேன். இணைய வாழ்விற்காக நிஜ வாழ்வையும், நிஜ வாழ்வில் இருந்த சில எனக்கான தருணங்களையும் இழந்துவிடும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்தது. மன வேதனையில் திரிந்து கொண்டிருந்தபொழுது இரண்டாமவள் ஆறுதலாக வந்தாள். ஆனால், எடுத்த எடுப்பில் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. முடிந்த அளவிற்கு அவளை என்னிடம் இருந்து விலக்...