இதுவரை நான் என்னுடைய பெயரை அதாவது எழுத்தாளுமை இக்ரிஸ் என்ற பெயரை கூகிள் செய்து பார்த்தது இல்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை. இந்த நவம்பர் மாத துவக்கத்தில் நான் சரியாக ஆன்லைன் வராமல் இருந்தேன். எதையாவது செய்து கொண்டும் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டும் ஊரை சுற்றிக்கொண்டும் மொத்தத்தில் உறுப்படியாக எதையும் செய்யவில்லை என புரிந்து கொள்ளுங்களேன். அப்பறம் எப்படி புத்தகம் வெளியிட்டீர்கள் எனக்கேட்டால் அது தனி வலைபதிவாக வரும். காத்திருங்கள். அப்படி ஒருநாள் மாலை காபி குடித்துக்கொண்டே சிகரெட்டை புகைத்துக்கொண்டிருந்தபொழுது திடீரென தோன்றியது. நிஜ வாழ்வில் இருக்கும் என்னை பலருக்கு தெரியும். இன்னும் சரியாக சொல்லப்போனால் எனது சொந்த ஊரில் முக்கிய தலைகள், பெரும்புள்ளிகள், காவல்துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், நீதிபதிகள், சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை அத்தனை நபர்களின் அலைபேசி எண்ணும் என்னுடைய மொபைலில் இருக்கும். கிட்டத்தட்ட 6,000 ற்கும் மேற்பட்ட தொடர்புகளை சேமித்து வைத்திருக்கிறேன். நான் சேமித்து வைக்காத தொடர்புகள் எத்தனை என்பது கணக்கில் இல்லை. ஆனால் இந்த இக்ரிஸ் என்பவன் யார்? அதாவத...
ஆம்! நான் கடவுள்தான். சாத்தான்களின் கடவுள்.