முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப்ளாக் - 27 | அன்பே கூகிள்..

கூகிள் 1998 உருவாக்கப்பட்டதும் அதன் அபார வளர்ச்சியும் இங்கே இருக்கும் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியவில்லை எனில் தெரிந்துகொள்ளாமலே இருந்துவிடுதல் நல்லது.

கூகிள் வெறும் சர்ச் எஞ்சின்தான். அதாவது நமக்கு தேவையானதை தேடிக்கொடுக்கும் ஒரு வேலையை சுலபமாக்கித்தரும். அதுவும் துல்லியமாக தருமா எனக்கேட்டால் தெரியாது. ஏதோ ஒன்றை குத்துமதிப்பாக தரும். அதில் வரும் செய்திகளும் அது தரும் லிங்குகளும் உண்மையா என்பதை நாம் எங்கிருந்தும் தேடி கண்டுபிடித்துவிட முடியாத அளவிற்கு அதன் ரிசல்ட்கள் இருக்கும். அதனாலேயே பல நேரங்களில் நமக்கு உண்மை செய்தி எது பொய் செய்தி என்பது தெரியாமலேயே போய்விடும். குழப்பத்தை உருவாக்குதல் என்றே சொல்லலாம்.

மதன் கௌரி ஒருமுறை சொல்லி இருந்தார். அவர் எப்பொழுதும் கூகிள் ரிசல்ட்களின் முதல் பக்கத்தை மட்டும் பார்க்காமல் 10-20 பக்கங்கள் வரை சென்று தகவல்களை சேகரிப்பாராம். ஆனால் இன்றுவரை அவைகளில் எது உண்மையானவை என யாருக்கும் தெரிந்தது இல்லை. சுவாரசியமாக இருக்குமே ஒழிய உண்மை? இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டும் ஒரு நிறுவனம்தான் கூகிள். அவர்களுக்கு காசு கொடுத்துவிட்டு நீங்கள் எதை ப்ரமோட் செய்ய சொன்னாலும் செய்வர். அவர்களுக்கு காசு வேண்டும் அவ்வளவே. இதற்கு பெருமளவில் அவர்களுக்கு உதவுவது அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட்.

ஆன்ட்ராய்ட்டின் செயல்கள், செயல்பாடுகள், பயன்பாடுகள் இதெல்லாம் தெரிந்த நமக்கு அதை கையில் வைத்திருப்பவர் யார் என்பது தெரிந்ததே இல்லை. உண்மையில் ஆன்ட்ராய்ட் ஒரு ஓப்பன் சோர்ஸ். அதாவது அதை யாரும் சொந்தம் கொண்டாடவும் முடியாது போலவே அதை பயன்படுத்த எவ்வித தடைகளும் இருக்காது இருக்கவும் கூடாது. அதை உடைக்கிறான் கூகிள். ஆன்ட்ராய்டை தனதாக்கிக் கொண்டு சாம்சங்குடன் கூட்டு வைத்து அவன் முதலில் அழித்தது நோக்கியா. "நோக்கியா மார்க்கெட்டில் கெத்து, அவன்தான் ஆன்ட்ராய்ட் வேண்டாம் எனச் சொன்னான்" என சொல்லப்பட்ட கூகிளின் தேடுதலில் கிடைத்த கதையில் இருக்கும் உண்மைத்தன்மையை நோக்கியாவே ஒருநாள் வெளியிட்டால்தான் வெளிச்சத்திற்கு வரும். காத்திருக்கிறேன்.

ஜிமெயில் யூட்யூபும் கூட அவனுடையது அல்ல. அவன் வளர்ந்தபிறகு வாங்கினான் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆன்ட்ராய்டில் இவன் செய்வது என்ன? புளோட்வேர்களை கொடுப்பதும், குறிப்பிட்ட ஃபங்சன்களை மட்டும் பயன்படுத்த அனுமதிப்பதும்தான். Developer Option ஐ பயன்படுத்த அனுமதிக்கிறான் என மல்லுக்கு வராதீர்கள். Voice access என்ற ஒன்று இருந்தது. அதை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட Iron Man-ல் வரும் Jarvis-ஐ போல ஃபோனை பயன்படுத்தலாம். நானே பர்சனலாக பயன்படுத்தி இருக்கிறேன். ஃபோனை தொடாமலே மொத்த ஃபோனையும் பயன்படுத்த முடியும். அதை தடுத்துவிட்டான். நீங்கள் முட்டுகொடுக்க நினைக்கும் Developer Option -இல் இப்பொழுது இருப்பது வெறும் சாணி மட்டும்தான்.

போலவே அவனது Terms & Conditions-ல் அவன் வைத்திருப்பது அனைத்தும் அவனுக்கு சாதகமானது மட்டும்தான். அவனுக்கு தேவையான தகவல்களை அவன் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ள நான் எதற்கு என் கைகாசை செலவு செய்து மொபைல் வாங்க வேண்டும்? நான் எதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்? எந்த கேள்விக்கும் பதில் இல்லை.

சென்றமுறை அமெரிக்காவில் ட்ரம்ப் ஜெயித்தபொழுது அதற்கு முக்கிய காரணமாக, மேனிபுலேசன் செய்ததாக மார்க் சக்கர்பர்க் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. சத்தமில்லாமல் கூகிள் அந்த வழக்கில் இருந்து தப்பித்துக்கொண்டான். முக்கிய குற்றவாளி கூகிள்தான். ஏனெனில் இந்த மேப் என்ற செயலி இவனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்று. எந்த ஊரில் இருப்பவர்கள் ட்ரம்ப்க்கு வாக்களிக்க முடியும் என்ற தகவலை மார்க்கிற்கு யார் வழங்கி இருப்பார்கள்? கேள்வியே வேண்டாம் கூகிள்தான். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஏற்கனவே உலகம் முழுக்க இவனது பேரில் ஏகப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் தொகுத்து பதிவிட வேண்டும் என்பதும் எனக்கு ஆசைதான். ஆனால் அதை வைத்து ஒன்றும் பயனில்லை. எப்படியும் பணத்தை வைத்து தப்பித்துவிடுவான்.

உங்களுக்கு அதைப்பற்றிய தகவல்கள் வேண்டுமெனில் அவனிடமே கேளுங்கள். சொல்வான். மீண்டும் அதே கேள்வியை ChatGPT இடம் கேளுங்கள். இன்னும் அதிக தகவல்கள் கிடைக்கும். ஏனெனில் அவன் அவனைப்பற்றிய தவறான தகவல்கள் இணையத்தில் வலம் வருவதை விரும்ப மாட்டான்.

இப்படி இருக்கும் ஒருவன் என்னை Provocative Writer என்கிறான். அப்படி என்றால் அவனை Provoke செய்ய வேண்டும்தானே? அதற்குதான் இந்த பதிவு.

எப்படி Provoke ஆவான்?

நான் இந்த வலைப்பதிவை பதிவிடும் இடம் Blogger. அந்த வெப்சைட் இவனுடையது.

ஒன்று இதை பார்த்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டும்.

அல்லது

இனி என்னுடைய ப்ளாக் பதிவுகள் என்னைப்பற்றி தேடினால் வராத அளவிற்கு 3-4 வது ரிசல்ட்களில் தள்ளிவிடுவான். அப்படி நடந்தால் படித்துவிட்டான் என்றுதான் அர்த்தம். நான் ஜெயித்துவிட்டேன்.

Provocative Writer என சொன்னால் அது அவன் சொல்லவில்லை அல்லவா? என நீங்கள் கேட்கலாம்.

அதாவது, என்னைப்பற்றி கூகிளில் தேடியவர்களிடம் அந்த தேடுதல் முடிவைப்பற்றி ஒப்பீனியன் வாங்குவானே ஒழிய, அந்த குறிப்பிட்ட தேடுதலைப்பற்றி வாங்க மாட்டான். அப்படியே வாங்கினாலும் அது சர்ச் ரிசல்ட்டில் வந்திருக்க வேண்டுமே ஒழிய A.I Summary-இல் வந்திருக்ககூடாது. அப்படி வந்திருக்கிறது எனில், அந்த A.I-க்கு இவர்கள்தான் feed செய்திருக்க வேண்டும். இது இவன்தான் செய்திருக்கிறான் என இவ்வளவு ஆணித்தனமாக சொல்வதற்கான காரணம் என்னவெனில் அவன் பயன்படுத்தி இருக்கும் வார்த்தை,"Provocative". சாதாரணமாக இந்தியாவில் இவ்வளவு நேர்த்தியாக ஆங்கிலத்தை பயன்படுத்த மாட்டார்கள். எனவே இது அவனின் தவறாகவோ அல்லது திட்டமிட்ட சதியாகவோதான் கணக்கில் எடுத்துக்கொள்வேன்.

இது கூகிளின் தவறு இல்லை என்ற வாதத்திற்கு வந்தாலும், கூகிளின்மீது தவறே இல்லை என்ற வாதத்திற்கு வரவே முடியாது. ஏனெனில் இது யாரோ ஒரு மூன்றாவது மனிதனின் வெப்சைட்டில் வரவில்லை. கூகிளின் A.I Overview-இல் வருகிறது. எனவே இதற்கு கூகிள் மட்டுமே முழு பொறுப்பு.

இதற்கு என்னால் சட்டரீதியாக வழக்கும் தொடுக்க முடியும்.

"Google AI Overview displays a false and damaging description of my identity and activities without any external source support. This constitutes negligent misinformation and misrepresentation" என ஒரு லீகல் நோட்டீஸ் கொடுக்க முடியும்.

கூகிள் இதுவரைக்கும் என்னுடைய டேட்டாக்களை எந்த அளவிற்கு சேகரித்து வைத்திருக்கிறான் என்பதை தெரிந்துகொள்ளவும் அதை தவறாக பயன்படுத்தி இருக்கிறானா என்பதற்காக GDPR-இல் ஒரு வழக்கும், போலவே என்னைப்பற்றி தவறாக சித்தரித்தற்காக RTBF-இல் ஒரு வழக்கும் வெகு சுலபமாக தொடுக்கலாம்.

GDPR அளவிற்கு RTBF பலமாக இல்லை என்றாலும், RTBF சொல்வது என்னவெனில்,"If information displayed online is false, misleading, or causes needless harm to a private individual’s reputation, it may be removed from search results." ஆகவே டெல்லி சென்றால் ஒரே நாளில் கூகிளை இங்கே இழுத்து உட்கார வைத்துவிடலாம்.


நான் RTBF-க்கு எப்படி தகுதியானவன்?

1) இது ஏதோ Third party site இல்லை. Google-ன் சொந்த ஏ.ஐ ஆல் உருவான தவறு. ஏனவே இதற்கு அவன் மட்டுமே பொறுப்பு.

2) தவறான விளக்கம்

3) நற்பெயர் இல்லை. இருந்தாலும் அதற்கு சேதம் ஏற்படுத்த இருக்கிறான்.

4) Search result direct-ஆ குற்றம் சாட்டுவதைப் போல குறிப்பிட்டு இருக்கிறான்.

5) என்னுடைய consent இல்லாமல் அவனே claim செய்தது.

ஆக, இதெல்லாம் நிச்சயமாக பிரச்சனைக்குறியவை. இப்பொழுது இதையெல்லாம் பகிர்ந்ததனால் இந்த பக்கம் போனாலும் பரவாயில்லை. நான் WordPress க்கு சென்று விடுவேன். ஆனால் குரல் கொடுக்காமல் அமைதியாய் சாக மாட்டேன். (Screenshot கடைசியில் இணைத்துள்ளேன்.)

அன்பே கூகிள். இது ஆரம்பம்தான்.

- எழுத்தாளுமை இக்ரிஸ் (14/11/2025)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...