முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தடுமாற்றம்! • சீரற்ற சிந்தனைகள் - 1

என்னுடைய எழுத்துப் பயணத்தில், எத்தனையோ முறை எழுதுவதை நிறுத்தி இருக்கிறேன். மூன்று மாதம், ஆறு மாதம், சில நேரங்களில் வருடம்கூட தேவைப்படும், மீண்டும் எழுத துவங்க. ஆனால், இந்த முறை ஒன்றை எழுத துவங்கி, அதை பாதியில் நிறுத்தி, மீண்டும் அதை தொடரலாம் என நினைத்து, எழுத உட்காருகையில்.. வார்த்தைகள் கிடைக்காமல், அன்று நான் அதை எழுதுவதற்கான காரணமும், இன்று நான் தொடர்வதற்கான மனநிலையும் ஒன்றோடு ஒன்றிணையாமல், தடுமாறி, தடம் மாறி, ஆளரவமற்ற மயானமாய் உணர்கிறேன். இந்த தடுமாற்றம், தயக்கம், சிந்திக்கவியலா முட நிலை, ஏன்? எப்படி? எதற்காக? எது தடுக்கிறது? என்ற கேள்விகளை கடந்து.. இந்த நிலையை அப்படியே நிறுத்தி வை, தொடராதே! என்னும் பேராணை பிறப்பிக்கிறது மனது. கிரகிக்க நினைக்கிறதா? அழிக்க துடிக்கிறதா? வானளாவிய எதிர்ப்புகளுக்கு கலங்காத திமிர் அடங்கிப் போகிறதா? தெரியாது. இருப்பினும், இருக்கிறேன் காத்து கொண்டு. மீண்டும் பேனா எடுக்கும் தருவாயில், காகிதத்தில் வரைவது ஊதா மையாக இல்லாமல், கருஞ்சிவப்பு இரத்தமாக இருந்தால்.. காகித வாசனையும் இரத்த கெவுளும் சேர்ந்து நாசியை நடனமாட வைத்துவிடும். இருப்பினும், அந்த கேள்விக்கு எனக்கு...

நான் ஏன் மனிதர்களை வெறுக்கிறேன்?

குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சில வருடங்களுக்கு முன் பன்றியின் DNA வும் மனிதனின் DNA வும் ஒன்றாக இருப்பதாக மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடுக்கபட்டது. இது அப்படியே இருக்கட்டும். அவன் எப்படி உருவானான்? என்ன செய்தான்? என்ன செய்கிறான்? என்ன செய்வான்? இதெல்லாம் அவசியமற்றது என்றாலும், விலங்கிலிருந்து வந்த,"அருவறுக்கத் தக்கவன் அவன்" என்பதுதான் எனது முதல் பத்தி. மனிதன் அவனாகவே சிந்திக்க மாட்டான். சிந்தித்தாலும் செயல்படுத்த மாட்டான். செயல்படுத்த நினைத்தாலும் அதன் பலன் மட்டும் தனக்கு கிடைத்தால் போதுமானது என நினைப்பான். உதாரணமாக, பெற்றோர் தன் பிள்ளைகளை அவர்தம் விருப்பத்திற்கு வளர விடாமல் தத்தம் விருப்பத்திற்கு வளர்ப்பதை சொல்லலாம். கடைசிவரை அவனுக்கு என்ன வேண்டும்? அவன் என்ன நினைக்கிறான்? அவனின் ஆசாபாசங்கள் என்ன? இதைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களின் முழுக் கவலையும் சமூகத்தையும், உறவினர்களையும், முகமே தெரியாத எதிர்கால சம்மந்திகளைப் பற்றியும். யாருக்கு என்ன தேவை இருக்கிறது? இவன் இந்நாளில் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைப்பற்றி. சுத...

சாத்தானின் போதனைகள் - 4

151) சந்தோஷமோ, துக்கமோ, அது உனக்குத் தந்த அதே அளவு பாதிப்பை, பிறருக்கும் தர வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை. உணர்வுகள் உன் படுக்கையறை போன்றது, எவரிடமும் பகிராதே. 152) "புகை பிடித்தல், மது அருந்துதல் கேடானது. நிறுத்திவிடு" என யாராவது உன்னிடம் அறிவுரை சொல்கிறார்களா? உடனடியாக நிறுத்திவிடு. அப்படி சொல்பவர்களிடம் பேசுவதை, பழகுவதை. 153) "எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்? ரூம் போட்டு யோசிப்பீர்களா?" என்று ஒரு கமெண்ட். ரூம் போடுவேன். ஆனால் யோசிப்பதற்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 154) இந்த நாள் மிகவும் மோசமானதாக இருந்ததா? சோகமாகவும், வெறுப்பாகவும் உணர்கிறாயா? இந்த பதிவு உனக்குத்தான். வாழ்நாளும், சந்திக்க வேண்டிய பிரச்சனைகளும் ஏகப்பட்டது இருக்கிறது. கிழித்து எறியப்போகும் தேதியைப் பற்றி கவலைப் படுகிறாய் என்றால், அவசரமாக செத்துப்போய்விடு 👍 155) "உடல்/கைகால் வலி, கனகனவென காய்ச்சல் வருவதுபோல இருக்கிறது, உறங்க முடியவில்லை" என சொன்னால் நாலைந்து மாத்திரைகளுடன், இதுவும் கிடைக்கும். எடுத்த எடுப்பில்,"போதை மாத்திரை வேண்டும்" என கேட்டு கைதாகிவிடாதே. 15...

சாத்தானின் போதனைகள் - 3

101) சாலையில் வாகனத்தை வேகமாக ஓட்டுவது த்ரில்லாக இருக்கும் என்கிறார்கள். பிரேக்குகளை பிடுங்கி எறிந்து விட்டு ஓட்டிப்பாருங்கள். அதைவிட த்ரில்லாக இருக்கும். 102) "No airbags. We die like men." என்ற வசனத்தை சமீபமாக பல கார்களில் பார்க்கிறேன். ஒன்று சண்டையில் சாக வேண்டும் அல்லது கொண்டையில் சாக வேண்டும். ஆக்சிடென்டில் சாவதெல்லாம் ஆம்பளத்தனத்தில் வராது என்பதை.. 103) பிள்ளைகள் தேவையில்லாமல் பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்வதாக பெற்றோர்கள் சொல்வதை கேட்டால் சிரிப்பு வருகிறது. பள்ளி கல்லூரிகளில் சேர்த்து விடுபவர்களே அவர்கள்தான். 104) நான் இறந்துவிட்டால் எனது நடு விரலை இந்தியாவின் கல்வி முறைக்கும் அதன் அமைப்புகளுக்கும் தானமாக கொடுத்துவிடுங்கள். 105) பணத்தையும், பொருட்களையும் வைத்து வெற்றி தோல்வியை முடிவு செய்கிறார்கள். இவர்களுக்கு எதை நிரூபித்து என்ன சாதித்து விடப் போகிறாய்? 106) நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பீர்கள்? நல்லவர் போல் இருக்கும் கெட்டவரா இல்லை கெட்டவர் போல் இருக்கும் நல்லவரா என சிலர் கேட்கிறார்கள். நான் பார்ப்பதற்கு நார்மல் அக்கியூஸ்ட்டை போல இருக்கும் சைக்கோ. 👍 107) கட...

சாத்தானின் போதனைகள் - 2

51) தூக்கத்திலேயே இறந்து விடுபவர்கள் லட்சம் பேர் இருக்கையில் நாமெல்லாம் முழித்ததே பெரும் அதிசயம். அப்படி இருக்க அடுத்த அறுபது ஆண்டுகள் குறித்த கவலை உனக்கு எதற்கு? இந்த நொடியில் கவனம் வை. 52) துரோகிகளின் பிறந்தநாளில் அவர்களுக்கு பரிசளிக்க மறக்காதே. நாட்டு வெடி வீட்டிலேயே தயாரிக்கலாம். 53) ஒதுக்கப்படும் வரை ஒருவரிடம் அன்பை எதிர்பார்க்காதே. பார்த்தவுடன் பிடித்து, பழகினால் புளித்துவிடும் வெறும் மனிதர்கள்தான் நாம். எவருடைய அன்பிலும் தேங்கி நின்று விடாதே. 54) எக்காரணத்தை கொண்டும் தற்கொலை செய்ய நினைக்காதே. மீறி செய்தே ஆகவேண்டும் எனில் குறைந்தபட்சம் ஐம்பது பேருடன் செய்துவிடு. மரணமாவது சரித்திரமாகட்டும். 55) ஒன்று அடி அல்லது அடி வாங்கு. வேடிக்கை பார்த்துக் கொண்டு அப்படி அடித்திருக்கலாம் இப்படி மிதித்திருக்கலாம் என ஏகவசனம் பேசாதே. 56) Let them realise-களையும் let them regret-களையும் 2024 உடன் மூட்டை கட்டி ரோட்டோரத்தில் வீசி விடு. let them suffer, let them bleed, let them beg for death என்னும் புதிய தீர்மானங்களுடன் 2025 ஐ துவங்கு. புத்தாண்டு வாழ்த்துகள். 57) நீ சோகமாக இருந்தால் வாட்ஸ்அப்பில் என்ன...

சாத்தானின் போதனைகள் - 1

1) ஒருத்தர்னால நமக்கு எந்த காரியமும் ஆகாதுன்னா நாம அவங்கள மதிக்க மாட்டோம். அதேதான் நமக்கும், மதிக்கப்படவும் மாட்டோம். இதுதான் நியதி. 2) எத்தனை முறை தட்டினாலும் திறக்காத கதவுக்கு பின்னால் இருப்பவர்கள் செவிட்டு முண்டங்களாக கூட இருக்கலாம். 3) விற்க போகும்வரை வீட்டிற்கு மதிப்பில்லை. 4) வயிறு நிறைந்தபின் உணவை நினைத்தால் உமட்டல் வரத்தான் செய்யும். 5) நண்பனும், முழுமுதற் எதிரியும் நம் சிந்தனைகள்தாம். மனிதர்களை கணக்கில் வைத்து நேரவிரயம் செய்யாதே. 6) ஆசைப்படுவது எதுவும் நடக்காது என்று புரியும் நேரத்தில், ஆசைப்படுவதையே நிறுத்தி இருப்போம். 7) கோவம் வரும்போது தியானம் செய். கொலைகள் செய்வது சட்டப்படி குற்றம். 8) அரசியல்/பண ரீதியான பலன் இல்லையெனில் இறந்த மூன்று மாதங்களில் குடும்பம் கூட மறந்துவிடும். இவர்களுக்காகவா கொள்கை கோட்பாடுடன் இயந்திர வாழ்க்கை வாழ்கிறாய்? 9) உன் காதில் விழுபவை எல்லாம் அவரவர் கருத்தும் அவர்கள் கேட்டறிந்த செவி வழி செய்திகளும் தான். உண்மை துளியும் இல்லை. 10) நேரத்திற்கு தகுந்தாற்போல் நடப்பது, ஏழையாய் இருந்தால் பச்சோந்தித்தனம் பணக்காரனாய் இருந்தால் ராஜதந்திரம். அவ்வளவுதான். 11) எரி...

முகமில்லா மனிதர்கள்

கடந்த திசம்பர் மாதத்தில் இருந்து இஸ்ட்டாகிராமில் நான் ஒரு மாதிரியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். ஒரு மாதிரி என்பது உண்மையில் ஒரு மாதிரி. நான் ஏதோ ஒரு விரக்தியில் வன்மமாக எழுதிய ஒரு பதிவு வைரலாகிப் போக, அதே போன்ற வன்மமிகு பதிவுகளுடன் உலாவ ஆரம்பித்துவிட்டேன். உண்மையில் இது ஆரோக்கியானதா என கேட்டால், சொல்கிறேன். அதற்குமுன், எல்லாவற்றிற்கும் முன்பாக நான் ஏன் எனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட விரும்பவில்லை என்பதை பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். நான் நெட்டையா குட்டையா, கருப்பா வெள்ளையா, ஒல்லியா குண்டா, இவ்வளவு ஏன்? ஆணா, பெண்ணா என்பதுகூட பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. நான் தெரியப்படுத்த விரும்பவில்லை. பயப்படுகிறேனா? தாழ்வு மனப்பான்மையா? இதுபோன்ற பல கேள்விகள் நேரடியாக எழுந்து இருக்கின்றன. உண்மை அதுவல்ல. கால் ஆஃப் ட்யூட்டியில் கோஸ்ட் என்று ஒரு கேரக்டர் இருக்கும். கடைசிவரை அந்த கோஸ்ட் யார்? என்ன? பெயர்? ஊர்? என எதுவும் தெரியாது. ஆனால் கோஸ்ட் என்றவுடன் அனைவரும் பதைபதைப்பனர். அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாவது, நான் எழுதுவதைப்போல என்னால் நடந்துகொள்ள முடியுமா எனில் நிச்சயமாக முடியும். அதற்க...

காமம்!

பெரிதும் பேசப்படாத அல்லது பொதுவெளியில் பகிரப்படாத அல்லது மறைத்து வைக்கப்படுகிற அல்லது ஒதுக்கப்படுகிற அல்லது பாதுகாக்கப்படுகிற ஒரு அதி அற்புத அதேநேரம் அற்ப விஷயமாக நான் பார்ப்பது, காமத்தைதான். ஆணோ, பெண்ணோ அவர்களுக்குள் இருக்கும் உடல்ரீதியான காமத்திற்கான தேடலை, மனரீதியான கனவுகளை எங்கும் வெளியே தெரிந்துகொள்ள முடியாமல் அல்லது தெரிந்ததை பகிர்ந்துகொள்ள இயலாத ஓர் கட்டமைப்பு, இந்த சமூகத்தில் நிலவி வருவதை பெரும் அபத்தமாகவே நான் காண்கிறேன். குழந்தை பெறுவதை பெரும் போரில் வெற்றி பெற்றதைப்போல கொண்டாடப்படுவதைப்போல, அதன் செயல்முறை ஏன் கொண்டாடப்படுவதில்லை? அல்லது ஏன் மறைக்கப்படுகிறது? என்னைப் பொறுத்தவரை, இத்தனை பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதற்கு முக்கால்வாசி காரணமாக நான் இதைத்தான் கூறுவேன். காமத்தின் தேடல். அதைப்பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையே, வன்புணர்ச்சிக்கு காரணம். உளவியல் ரீதியாக, இது உண்மையாககூட இருக்கலாம். இங்கே, கலாச்சாரம் என்றோர் கட்டமைப்பு இருக்கிறது. இவர்களின், கலாச்சாரத்தின் மிக முக்கிய நோக்கம், அந்தரங்க உறுப்பை பாதுகாப்பது. குறிப்பாக, பெண்களின் அந்தரங்க உறுப்பை. என்ன பயன்? இரவு என்ற நாவலி...